Wednesday, 23 February 2011

காமன்வெல்த் ஊழல்: 2 அதிகாரிகள் கைது!


காமன்வெல்த் போட்டி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ரூ.600 கோடி ஊழல் இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இப்போது காமன் வெல்த் போட்டி ஏற்பாடுளை கவனித்து வந்த அதிகாரிகள் கே.யு.கே. ரெட்டி, பிரவீன் பக்ஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காமன்வெல்த் போட்டிக்காக கூடாரங்கள், நடமாடும் கழிவறைகள், ஏர்கண்டிசர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வாங்கப்பட்டன. இதில் ரூ.600 கோடி ஊழல் நடந்ததாக கணக்கிடப்பட்டு இருந்தன.

இதில் தொடர்புடைய அதிகாரிகள், காண்டிராக்டர்கள் வீடு, அலுவலகங்களில் 3 நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து அதிகாரிகள் இருவரையும் சி.பி.ஐ. கைது செய்து உள்ளது.

No comments:

Post a Comment